இளம்பெண்ணின் உயிரை பறித்த நூடுல்ஸ் மற்றும் பக்காடி ரம்!? அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

இளம்பெண்ணின் உயிரை பறித்த நூடுல்ஸ் மற்றும் பக்காடி ரம்!? அதிர்ச்சி தரும் சம்பவம்!

சேலத்தில் மசாஜ் சென்டரில் தங்கி பணியாற்றி வந்த வடமாநில பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

சேலம்: சேலத்தில் மசாஜ் சென்டரில் தங்கி பணியாற்றி வந்த வடமாநில பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

சேலம் அழகாபுரம் அத்வைத ஆசிரமம் சாலையில் தி ராயல் ஹெல்த் ஸ்பா என்ற மசாஜ் சென்டர்  ஒன்று இயங்கி வருகிறது. இங்கு  மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

massage

கடந்த 22ஆம் தேதி பணி முடித்து 5 பெண்களும் வீட்டிற்கு சென்றுள்ளனர்.அப்போது மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்தர் என்ற பெண் மட்டும் கடைக்குச் சென்று நூடுல்ஸ் வாங்கி கொண்டு வந்துள்ளார். பின்பு பக்காடி ரம் குடித்துவிட்டு, அந்த நூடுல்ஸை  சாப்பிட்டுவிட்டு பின் படுத்து தூங்கியுள்ளார், மறுநாள் காலையில் எஸ்தர் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்த நிலையில் அவர் வந்து எஸ்தர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். பின்பு இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். 

murder

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், எஸ்தரின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்ததுடன் எஸ்தரின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எஸ்தரின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. 

பின்னர் எஸ்தர் குடித்த ரம் பாட்டில் மற்றும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் டப்பாவை எடுத்துச் சென்று போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். குடித்ததால் இறந்தாரா அல்லது  அவர் சாப்பிட நூடுல்ஸ் காரணமாக அவர் இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அவருடன் தங்கியிருந்த மற்ற பெண்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.