இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக இந்திய மருமகன்!  முத்தையா முரளிதரன் நாளை பதவியேற்கிறார்!

 

இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக இந்திய மருமகன்!  முத்தையா முரளிதரன் நாளை பதவியேற்கிறார்!

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக இந்திய மருமகனும், முன்னாள் நட்சத்திர வீரருமான முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என ஜனாதிபதி தரப்புகளில் இருந்து வெளியான உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக இந்திய மருமகனும், முன்னாள் நட்சத்திர வீரருமான முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என ஜனாதிபதி தரப்புகளில் இருந்து வெளியான உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.

muttiah

முத்தையா முரளிதரனை நேற்று அழைத்துச் சந்தித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிப்பதற்கு இலங்கை பொதுஜன பெரமுன திட்டமிட்டது. எனினும் முத்தையா முரளிதரன் அப்போது இது குறித்து பெரிய அளவில் நாட்டம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

rajabakshey

இந்நிலையில், நேற்றிரவு முத்தையா முரளிதரனை அழைத்து பேசிய ஜனாதிபதி, இலங்கையின் வடக்கு ஆளுநர் பதவியை ஏற்குமாறு வலியுறுத்தினார். வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனும், கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரனவும் நாளை நியமிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.