இலங்கை நடிகர் கைதால் வெளியான முன்னாள் கேப்டன் ஜெயசூரியா ஆபாச வீடியோ!

 

இலங்கை நடிகர் கைதால் வெளியான முன்னாள் கேப்டன் ஜெயசூரியா ஆபாச வீடியோ!

இலங்கை மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள் கைக்கு மாறியதைத் தொடர்ந்து அவர்களின் எதிரிகள் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். முந்தைய ராஜபக்ச ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்த அதிகாரிகளும் இதில் தப்பவில்லை. இந்த வரிசையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு இருக்கிறார் நடிகர் ரஞ்சன் ராமநாயகே.

இலங்கை மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள் கைக்கு மாறியதைத் தொடர்ந்து அவர்களின் எதிரிகள் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். முந்தைய ராஜபக்ச ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்த அதிகாரிகளும் இதில் தப்பவில்லை. இந்த வரிசையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு இருக்கிறார் நடிகர் ரஞ்சன் ராமநாயகே.

ரஞ்சன் ராமநாயகேவும் ஒரு வில்லங்கமான ஆள்தான்.கண்டியைச் சேர்ந்த ஆசிரியை  ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக 10 லட்சரூபாய் ஏமாற்றிய வழக்கில் 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்.அதற்குப் பிறகு சினிமாவில் நடித்து, அரசியலில் நுழைந்து யு.என்.பி சார்பாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நெடுஞ்சாலை மற்றும் கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சராக வளர்ந்தவர். 

captain-jayasurya

இவரது வீட்டில் லைசென்ஸ் காலாவதியான துப்பாக்கி இருப்பதாக போலீஸ் சோதனை நடந்தது. கடந்த 4-ம் தேதி நடந்த இந்த சோதனையில் ஒரு 9 மில்லி மீட்டர் பிஸ்ட்டலும்,127 புல்லட்டுகளும் கைப்பற்றப் பட்டன.அதோடு அந்த தேடுதலில் நடிகர் ரஞ்சன் வைத்திருந்த சில ஆபாச பட சிடிகளும் கைபற்றப்பட்டன.அதுபற்றி ரஞ்சன் கருத்துக் கூறும்போது, ‘எல்லோரும்தான் ஆபாசப்படம் வைத்திருக்கிறார்கள், என்றதோடு தான் வைத்திருக்கும் ஆபாசப்படத்தில் முன்னாள் கேப்டன் ஜெயசூரியாவும்,ஆளுங்கட்சியை ஆதரிக்கும் ஒரு தொலைக்காட்சி உரிமையாளர் மனைவியும் இருப்பதாக சொல்ல… இந்த விவகாரம்தான் இப்போது இலங்கையில் ‘ஹாட் டாபிக்’.

ஏற்கனவே மூன்றுமுறை திருமணம் செய்தவரான ஜெயசூரியா தோன்றும் பல்வேறு பிட்டு படங்களும் மறுபடி இணையத்தில் மறு பதிவேற்றம் செய்யப்பட்டு பரபரப்பாகப் பகிரப்படுகின்றன. இப்போது இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் ஜெயசூர்யா இனி அந்தப் பதவியில் நீடிக்க மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்து விட்டது.