இலங்கை தமிழர் பகுதியில் துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர்! கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு!

 

இலங்கை தமிழர் பகுதியில் துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர்! கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு!

இலங்கையில் கடந்த 16ம் தேதி நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 7-வது அதிபராக பதவி ஏற்றார்.  அதன் பின்னர், அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் பிரதமராக நியமித்தார். இதையடுத்து இடைக்கால அமைச்சரவையை நியமித்து தனது சகோதரர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கினார்.

இலங்கையில் கடந்த 16ம் தேதி நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்நாட்டின் 7-வது அதிபராக பதவி ஏற்றார்.  அதன் பின்னர், அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் பிரதமராக நியமித்தார். இதையடுத்து இடைக்கால அமைச்சரவையை நியமித்து தனது சகோதரர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கினார். இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழ்கிற பல பகுதிகளில் ராணுவத்தினர் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கான அவசர சட்டத்தை கோத்தபய ராஜபக்சே அமல்படுத்தியுள்ளார். 

srilanka

முன்னதாக தனக்கு தமிழர்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்று தெரிவித்திருந்த கோத்தபய ராஜபக்சே. பொது அமைதியைப் பேணுவதற்காக நவம்பர் 22ம் தேதியிலிருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார். அதன் படி, நேற்று முதலே இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் உட்பட 22 மாவட்டங்களில் இலங்கை ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அந்த பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் ரோந்து சென்று வருகிறார்கள்.