இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு: புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார்

 

இலங்கை அரசியலில் திடீர் பரபரப்பு: புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார்

இலங்கை நாட்டின் பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.

கொழும்பு: இலங்கை நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.

இலங்கையில் ரனில் விக்ரம சிங்கே தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

அந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் பொறுப்பில் மாற்றத்தை ஏற்படுத்த கூட்டணி கட்சிகள் ஆலோசித்துள்ளது. அதனையடுத்து, ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பொறுப்பில் இருந்து விலகினார். 

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடைய ஆதரவுடன் முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமாரக பதவி ஏற்றுள்ளார். அதிபர் மைத்ரி பால சிறிசேனா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

rajapakshe

rajapkse

இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதன்பின், சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ராஜபக்சே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்தி வந்தார்.

மேலும், கடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.