இலங்கை அதிபர் தேர்தலில் களமிறங்கும் கோத்தபய ராஜபக்ச!

 

இலங்கை அதிபர் தேர்தலில் களமிறங்கும் கோத்தபய ராஜபக்ச!

இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் களமிறங்கும் கோத்தபய ராஜபக்ச!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில், கொழும்புவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்றது.அதில்  முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைவராகவும், அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்ச வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்ச தான் இலங்கை ராணுவம் அப்பாவி மக்களைக் கொல்ல காரணம்  என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டது. 

முன்னதாக  இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் ஒருவர் இரண்டுமுறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதால்,  ராஜ பக்ச தேர்தலில் சகோதரரின் பெயரை  முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.