இலங்கையில் விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவிட்ட இருவரிடம் விசாரணை
விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவிட்ட இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு: விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவிட்ட இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விசாரணை காவலில் எடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி கிளிநொச்சி தர்மபுரம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் மற்றும் பாடலை ஒலிக்கசெய்ததும் ஆகிய புகார்களில் இரண்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் வைக்கப்பட்டிருந்த அந்த சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போதே எதிர்வரும் 11ஆம் தேதி வரை விசாரணை காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.