இலங்கையில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடிப்பு… கொடூரத்தை நிகழ்த்திய இருவர் கண்டுபிடிப்பு..!

 

இலங்கையில் மேலும் 2 இடங்களில் குண்டு வெடிப்பு… கொடூரத்தை நிகழ்த்திய இருவர் கண்டுபிடிப்பு..!

நூற்றுக்கணக்கானோர் உயிரை பலி வாங்கிய குண்டு வெடிப்பை நிகழ்த்திய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 6 இடங்களில் இன்று காலை குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில் 6 மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரை பலி வாங்கிய குண்டு வெடிப்பை நிகழ்த்திய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  Sucide bomber

ஏசு உயிர்த்தெழுந்த நாளில் கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய கட்டடங்கள் ரத்த சகதியில் மூழ்கி கிடக்கிறது. சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்கள் குண்டு வெடிப்பில் சின்னாபின்னமாகி கிடக்கின்றன. bamb blast

அங்குள்ள மருத்துவமனைகள் பிணக்குவியலாகி விட்டன. இந்நிலையில் 6 மணி நேரங்களுக்கு பிறகு தற்போது மேலும் புதிதாக 2 ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்துள்ளது.  தெய்வாலா மிருகக்காட்சி சாலைக்கு எதிரில் உள்ள  ஹோட்டலில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.  அடுத்து டிமாட்டகொடா பகுதியிலும் குண்டு வெடித்துள்ளது. ஆனால் இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்கிற விபரம் இன்னும் வெளியாகவில்லை.bamb blast

 இந்நிலையில் இந்த கொடூர குண்டு வெடிப்பை நிகழ்த்தியது ஷக்ரான் ஹசீம் மற்றும் அபு முகம்மது என்கிற இரு இஸ்லாமியர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் தற்கொலை படை தீவிரவாதிகள் என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.