இலங்கைக்கு நானே பிரதமர் – ரணில் விக்கிரமசிங்கே அதிரடி!

 

இலங்கைக்கு நானே பிரதமர் – ரணில் விக்கிரமசிங்கே அதிரடி!

மகிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய  பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், இலங்கையின் பிரதராக தான் தொடர்வதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை: மகிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய  பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், இலங்கையின் பிரதராக தான் தொடர்வதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி ஆட்சி செய்து வந்தது. இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி திடீரென உடைந்தது.

srilanka

இதனையடுத்து, இலங்கை சுதந்திரா கட்சியின் முன்னாள் தலைவராகவும் முன்னாள் அதிபராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். அதிபர் மைத்திபால சிறீசேனா முன்னிலையில் ராஜபக்சே அவர் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டார்.

ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடவும் அவர் முடிவு செய்துள்ளார். இதனால், அந்நாட்டில் குழப்பமான சூழல் நிலவுகிறது.