இறைவன் நம்முடனே இருக்க வேண்டும்!

 

இறைவன் நம்முடனே இருக்க வேண்டும்!

ஒரு ராஜா,  தன்னுடைய மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடம் இருந்து கப்பம் வசூலித்து வர அனுப்பி கொண்டிருந்தார்.  கப்பம் வசூலித்து, நாடு திரும்பும் போது  ஒரு அடர்ந்த காட்டை கடந்து தான் மந்திரி வர வேண்டும்.

ஒரு ராஜா,  தன்னுடைய மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடம் இருந்து கப்பம் வசூலித்து வர அனுப்பி கொண்டிருந்தார்.  கப்பம் வசூலித்து, நாடு திரும்பும் போது  ஒரு அடர்ந்த காட்டை கடந்து தான் மந்திரி வர வேண்டும்.

ஒவ்வொரு முறையும், மந்திரி செல்லும் போதும், தன்னுடன் நான்கு காவல்காரர்களையும் அழைத்துச் செல்வார். ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது. காட்டு வழியே வரும் போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள். மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து, இறைவனைப் பிரார்தனைச் செய்துக் கொண்டு நின்று விடுகிறார்கள்.

எங்கிருந்தோ ஆறு இளைஞர்கள் வந்து மந்திரியையும், அவரது காவலர்களையும் காப்பாற்றுகிறார்கள். மந்திரியுடன் ஆறு இளைஞர்களும் சேர்ந்து ராஜாவிடம் வருகிறார்கள். ராஜாவும்,  மிகவும் சந்தோஷமடைந்து இளைஞர்களிடம், ‘உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்’ என்று கூறுகிறார்.
முதல்  இளைஞன், தனக்கு பண வசதி வேண்டும் என்று கேட்கிறான். இரண்டாவது  இளைஞன், வசிப்பதற்கு நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான். மூன்றாவது  இளைஞன்,  தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகளை நன்றாக சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான். நான்காவது  இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான். ஐந்தாவது இளைஞன்,  தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான். அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன ராஜா, ஆறாவது  இளைஞனைப் பார்த்து, ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்கிறார்.

இளைஞன் சற்று தயங்குகிறான். ராஜா மீண்டும் கேட்க, ‘அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம். வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து, அங்கு என்னுடன் தங்கியிருந்தால் போதும்’ என்று சொன்னான்.

ராஜாவும், இவ்வளவுதானா என்று முதலில் கேட்டார். பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையைத் தெரிந்துக் கொண்டார். ஆம், ராஜா அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால், அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும். அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும். ராஜாவின் ஏவலை நிறைவேற்றி வைப்பதற்கு பணியாட்கள் வேண்டும். அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும். சொல்லப் போனால் முதல் ஐந்து இளைஞர்களும் கேட்டது எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும் என்று தன் மகளையே ஆறாவது இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் ராஜா. இந்தக் கதையில் வரும் ராஜா தான் நம் இறைவன். பொதுவாக எல்லோரும் இறைவனிடம்,  கதையில் கூறிய முதல் ஐந்து இளைஞர்களைப் போல், தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள். ஆனால் நாம் கடைசி இளைஞனைப் போல், இறைவனே எப்பொழுதும்  நம்முடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால், மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்