இறுதி ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி: த்ரில் வெற்றியின் முழு விபரம்

 

இறுதி ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி: த்ரில் வெற்றியின் முழு விபரம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.

5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 அடங்கிய போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 

இத்தொடரின் முதல் போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில், 17 ஓவராக குறைக்கப்பட்டது. அதில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்ற 3-வது போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த ஆஸி., அணி வீரர்கள் மளமளவென ரன்களை குவிக்கத்தொடங்கினர். ஆர்கி சார்ட் 33(29), ஆரோன் பின்ச் 28(23), ரன்களில் வெளியேறத் தொடர்ந்து களமிறங்கிய கெளன் மேக்ஸ்வெல் 13(16), அலெக்ஸ் கேரி 27(19) ரன்கள் குவித்தனர். அதன்படி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 164 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குர்ணல் பாண்டயா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 165 ரன்கள் இலக்குடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் 23(16), ஷிகர் தவான் 41(22) ரன்கள் குவிக்க முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய விராட் கோஹ்லி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61(41) குவித்தார். அவருக்கு துணையாக தினேஷ் கார்த்திக் 22(18) ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்நிலையில் ஆட்டத்தின் 19 ஓவர், 4-வது பந்தில் வெற்றிக்கான இலக்கை இந்திய அணி எட்டியது. 

இந்திய அணி பெற்றுள்ள இந்த வெற்றியின் மூலம், ஆஸி.க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது.