இறப்பதற்கு முன்பே கல்லறையைத் தேர்வு செய்த ரேகா! காரணம் இது தான்.. 

 

இறப்பதற்கு முன்பே கல்லறையைத் தேர்வு செய்த ரேகா! காரணம் இது தான்.. 

தமிழில் கடந்த 1986 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கடலோர கவிதைகள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா.

தமிழில் கடந்த 1986 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கடலோர கவிதைகள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேகா. அதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 

இந்த நிலையில் இவர் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குச் சுவாரசியமாகப் பதிலளித்தார். அப்போது அவர் அப்பா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘என் தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்காது. அவர் நான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டுமே பார்த்தார். ஆனாலும் அவர் என் மீதும், நான் அவர் மீதும் மிகுந்த அன்பு வைத்திருந்தோம். எனது தந்தை இறந்த பின்னர் கீழ்பாக்கத்தில் அவருக்காகக் கல்லறை எழுப்பினேன்.

அதனால் அவரை அடக்கம் செய்த இடத்தில் வேறு யாரையும் அடக்கம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். மேலும் அந்த இடத்திற்கு பக்கத்தில் நான் இறந்த பிறகு என்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார்.