இறந்த யானைகளின் உடல்களை சாப்பிட்ட 537 கழுகுகள் பலி!

 

இறந்த யானைகளின் உடல்களை சாப்பிட்ட 537 கழுகுகள் பலி!

ஆப்ரிக்க வனப்பகுதிகளில் இறந்த யானைகளின் உடல்களை சாப்பிட்ட 537 கழுகுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்ரிக்க வனப்பகுதிகளில் இறந்த யானைகளின் உடல்களை சாப்பிட்ட 537 கழுகுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போட்ஸ்வானா வன பகுதியில் 3 யானைகள் வேட்டையர்களால் கொல்லப்பட்டன. இறந்த அந்த யானைகளின் உடல்களை அரிய வகை கழுகுகள் சாப்பிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கழுகுகளின் மரணத்திற்கு யானையின் உடலில் நச்சுத்தன்மை கலந்ததே காரணம் என கூறப்படுகிறது. அதனால்தான் அவற்றை உண்ட கழுகுகள் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த அத்துணை கழுகுகளும், அரியவகை அதாவது அழிந்துவரும் சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள கழுகு இனங்களாகும். கழுகுகளின் இறப்பு குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. யானைகளை வேட்டையாடியவர்களே யானையின் மீது விஷத்தை பாய்த்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.