இறந்த தந்தையின் கையால் மாங்கல்யம் பெற்று தாலிக்கட்டிய மகன்!

 

இறந்த தந்தையின் கையால் மாங்கல்யம் பெற்று தாலிக்கட்டிய மகன்!

திண்டிவனம் அருகே  இறந்த தனது தந்தையின் கையால் மாங்கல்யத்தை பெற்று திருமணம் செய்த மகனின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டிவனம் அருகே  இறந்த தனது தந்தையின் கையால் மாங்கல்யத்தை பெற்று திருமணம் செய்த மகனின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தை சேர்ந்த தெய்வமணி என்பவரது மகன் அலெக்சாண்டர் வயது 29. இவருக்கு வரும் 2. 9. 2019 அன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்று இவரது தந்தை தெய்வமணி திடீரென்று காலமானார். இதனை அடுத்து பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெண் மற்றும் உறவினர்கள் அலெர்க்சாண்டர் வீட்டுக்கு வந்தனர். அவரது தந்தையின் சடலத்தின் முன்பே உறவினர்களின் முன்னிலையில் இறந்த தனது தந்தையின் கையால் மாங்கல்யத்தை பெற்று பெண்ணின் கழுத்தில் கட்டினார். இச்சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.