இருளில் பிரதமர் அலுவலகம் |  கரண்ட்டை கட் செய்த வாரியம்!

 

இருளில் பிரதமர் அலுவலகம் |  கரண்ட்டை கட் செய்த வாரியம்!

இருங்க…இருங்க… அவசரப்படாம முழு செய்தியையும் படிச்சுட்டு அப்புறமா சாவகாசமா சிரிக்கலாம். ஆனா இது நிச்சயம் நீங்க பாராட்டுகிற விஷயமா தான் இருக்கும். நமது நட்பு (?) நாடான பாகிஸ்தான்ல தற்போது பிரதமராக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். இப்போ அதுக்கு என்ன விஷயமா? விஷயம் இது தான்!

இருங்க…இருங்க… அவசரப்படாம முழு செய்தியையும் படிச்சுட்டு அப்புறமா சாவகாசமா சிரிக்கலாம். ஆனா இது நிச்சயம் நீங்க பாராட்டுகிற விஷயமா தான் இருக்கும். நமது நட்பு (?) நாடான பாகிஸ்தான்ல தற்போது பிரதமராக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான். இப்போ அதுக்கு என்ன விஷயமா? விஷயம் இது தான்!

prime minister

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானுடைய அலுவலகம் முழுக்க இருளில் மூழ்கியுள்ளதாம். இதை அந்நாட்டு செய்தி ஊடகங்கள் ரொம்ப வேகமா செய்தி வெளியிட்டு பரப்பி வருகிறது. எதற்கு இப்படி ஒரு நாட்டு பிரதமரின் அலுவலம் இருளில் மூழ்கியுள்ளது என்று பார்த்தால்  பிரதமர் அலுவலகத்தின் கடந்த மாதத்திற்கான  மின் கட்டணம்  41 லட்சம்  ரூபாய்கள். அதனோடு  இந்த மாதத்திற்கான  மின் கட்டணம் 35 லட்சம். இதனை  அந்நாட்டு பிரதமர் அலுவலகம் மின்சார வாரியத்திற்கு செலுத்தவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது .

building

இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகத்திற்கு முறையாக நோட்டீஸையும் அனுப்பி வெச்சுது மின்வாரியம். ஆனால் எந்தவித பதிலும் இல்லையாம். இதனால் பொறுமையை இழந்த அந்நாட்டு மின்சார வாரியம் பிரதமர் அலுவலகம்  மின்கட்டணத்தை செலுத்தாததால் மின் இணைப்பைத்  துண்டித்து உள்ளது. அந்நாட்டு மக்களிடையே இந்த விவகாரம் பேசு பொருளாகியுள்ளது .