இரும்பு சட்டங்களால் குழந்தை பலி ! மீண்டும் ஒரு அதிர்ச்சி!

 

இரும்பு சட்டங்களால் குழந்தை பலி ! மீண்டும் ஒரு அதிர்ச்சி!

புதுச்சேரி பி.என்.பாளையத்தில் இளவயதன், முத்துலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயது தனனியா மற்றும் எட்டு மாத ஆண் குழந்தை உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும்போது வீட்டில் 2 குழந்தைகளையும் பாட்டிதான் பார்த்துக்கொள்கிறார்.

புதுச்சேரியில் இரும்புச் சட்டங்கள் சரிந்து விழுந்ததில் வீட்டில் தனியாக இருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

புதுச்சேரி பி.என்.பாளையத்தில் இளவயதன், முத்துலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயது தனனியா மற்றும் எட்டு மாத ஆண் குழந்தை உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும்போது வீட்டில் 2 குழந்தைகளையும் பாட்டிதான் பார்த்துக்கொள்கிறார்.
இந் நிலையில் வழக்கம்போல 2 பேரும் நேற்று வேலைக்கு சென்றுவிட, இரண்டரை வயது குழந்தையை மட்டும் வீட்டில் தனியாக விட்டு விட்டு 8 மாத கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றுள்ளார் பாட்டி. வீடும், அங்கன்வாடி மையமும் அருகருகே இருப்பதால் சற்று நேரத்தில் வந்துவிடப்போகிறோமே என்ற தைரியத்தில் பெரிய குழந்தையை வீட்டில் விட்டு சென்றார் பாட்டி. ஆனால் சற்று வீட்டில் தனியாக இருந்த குழந்தை, பக்கத்துக்கு அறைக்கு தவழ்ந்து செல்ல, அங்கிருந்த இரும்புச் சட்டங்கள் சிறுமியின் மீது சரிந்து விழுந்தது. இதனால் குழந்தை தனனியா மயக்கமடைந்தாள். வெளியில் சென்றிருந்த பாட்டி வீட்டிற்கு வந்து குழந்தை இடிபாடுகளில் சிக்கியிருப்பதை கண்டு அலறி துடித்தார். பின்னர்  அக்கம்பக்கத்தினர் விரைந்து குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.