இருமுடிக்கட்டு இல்லாமல் 18ம் படியில் ஏறிய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி: அதிர்ச்சி அடைந்த தேவசம் போர்டு!

 

இருமுடிக்கட்டு இல்லாமல் 18ம் படியில் ஏறிய ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி: அதிர்ச்சி அடைந்த தேவசம் போர்டு!

கேரளா: தலையில் இருமுடிக்கட்டு இல்லாமல் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவர் 18-ம் படியில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரளா மாநிலத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதுவரை கோவிலுக்குள் ஒரு பெண்ணை கூட அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே நேற்று மாலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. இன்று காலை 52 வயதான பெண் ஒருவர் கோவிலுக்கு வந்தார். ஆனால், இளம் வயது பெண் கோவிலுக்குள் வந்துவிட்டதாகக் கூறி அங்கு தகவல் பரப்பப்பட்டது.

இதனால் கோவிலுக்குள் இளம் பெண் வந்துவிட்டதாகத் தகவல் பரவியதை அடுத்து, பக்தர்கள் 18-ம் படிக்கு அருகே குவிந்து நின்று கோஷம் எழுப்பினர். அப்போது, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான வல்சன் தில்லங்கேரி என்பவர் திடீரென 18-ம் படி மீது ஏறி அங்கிருந்த கூட்டத்தின் முன்னர் பேசினார். இது அப்பகுதியில் சலசலப்பை உண்டாக்கியது. 

18-ம் படியில் இருமுடிக்கட்டு இல்லாமல் யாரும் ஏறக்கூடாது, ஏறிய பின்னர் பாதி வழியில் திரும்பி கீழே இறங்கக்கூடாது என்ற ஐதீகம் பின்பற்றப்படும் நிலையில், வல்சன் தில்லங்கேரி இரு ஐதீகங்களையும் மீறியதாக தேவசம் போர்டு குற்றம் சாட்டியுள்ளது.