இருமுடிக்கட்டுடன் சபரிமலையில் ஓ.பி.எஸ் சாமி தரிசனம்!
மகர சங்கராந்தி தினமான கடந்த 15 ஆம் தேதி பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் மாலை அணிந்து விரதமிருந்தது ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். விஷு, மகர சங்கராந்தி, கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் கோவில் நடை திறக்கப்படும்.
மகர சங்கராந்தி தினமான கடந்த 15 ஆம் தேதி பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளித்தார். இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனிடையே மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்ட நடையானது நாளை அடைக்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிந்து இருமுடிக்கட்டுடன் இன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
சபரிமலையில் ஓபிஎஸ் தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.