இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக்கோரி வழக்கு

 

இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக்கோரி வழக்கு

இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கப்பட்டுள்ளது.

இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம்,  பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் ஜியோ (Jio) உள்ளிட்ட அனைத்து தொலை தொடர்பு சேவைகளிலும் போன் செய்தால், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளைச் சொல்லும்படியாக  அமைக்கப்பட்டுள்ளது. இருமல் சத்தத்துடன் ஆரம்பமாகும் அந்த  விழிப்புணர்வு ஆடியோவில், கொரோனா வைரஸை தடுக்க சோப் மூலம் கைகளை அடிக்கடி கழுவவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கொரோனா வைரஸ்

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த வழக்கறிஞர் சிவ. ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,  “இருமலுடன் தொடங்கும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காலர் டியூனை தடை செய்யவேண்டும்.  இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது போன்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். விளம்பரம் எரிச்சல் ஊட்டும் வகையிலும் இருக்கிறது ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், திரையரங்குகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பல வழிகள் இருக்கும்போது, இருமலுடன் தொடங்கும் ரிங்டோன் பயன்படுத்துவது மக்களின் அமைதியான வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.