இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?

 

இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய  சந்தோஷ் பி.ஜெயக்குமார்ரின் அடுத்த படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை இயக்கிய  சந்தோஷ் பி.ஜெயக்குமார்ரின் அடுத்த படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் மூலம்  இயக்குநராக அறுமுகனாவார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதைத்தொடர்ந்து  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார். மூன்றாவது முறையாக மீண்டும் தீமைதான் வெல்லும் படத்தின் மூலமாக நடிகர் கெளதம் கார்த்திக் வைத்து புதிய படம் இயக்குள்ளார். மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 20 முதல் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது

இந்நிலையில், இன்னும் ஆரம்பிக்கப்படாத இப்படத்திற்கு முன் இவரது இயக்கத்தில் தற்போது பார்த்து பல்லுபடாமல் என்ற ஆபாச படம் திரைக்கு வர உள்ளது. இவருடைய இரு படங்களின் தலைப்புகளும் படு சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் தற்போது இந்த தலைப்பும் விவாத பொருளாக மாறியுள்ளது.