இராயபுரத்தில் ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை – சென்னை மண்டலவாரி பட்டியல் வெளியீடு

 

இராயபுரத்தில் ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை – சென்னை மண்டலவாரி பட்டியல் வெளியீடு

சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 10 ஆயிரத்து 585 பேருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3538 பேர் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் அதிகபட்சமாக இராயபுரத்தில் 1112 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 973 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம் போன்ற பகுதிகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மொத்தம் இதுவரை சென்னையில் 6271 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.