இரவு 10 மணி வரை கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

 

இரவு 10 மணி வரை கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொருத்தவரை கடந்த 2 நாட்களாக விடாமல் மழை பெய்தது. ஆனால், காற்றத்தழுத்த தாழ்வு நிலை இன்று வலு குறைந்ததையடுத்து, படிப்படியாக மழை குறைய தொடங்கியது.

இந்நிலையில், நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, காரைக்கால் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.