இரவில் ராஜ நடை போட்டு உலா வரும் சிங்கங்கள்: வைரலாகும் வீடியோ!

 

இரவில் ராஜ நடை போட்டு உலா வரும் சிங்கங்கள்: வைரலாகும் வீடியோ!

குஜராத்தில், பூங்காவிலிருந்து தப்பிய 7 சிங்கங்கள் குடியிருப்பு பகுதிகளில் ராஜா நடை போட்டு உலா வரும் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. 

குஜராத்தில், பூங்காவிலிருந்து தப்பிய 7 சிங்கங்கள் குடியிருப்பு பகுதிகளில் ராஜா நடை போட்டு உலா வரும் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. 

Lions

குஜராத்தில் ஜுனாகத் என்னும் பகுதியில், கிர்னார் விலங்கியல் பூங்காவில் வசிக்கும் சிங்கங்களில் 7 சிங்கங்கள் பூங்காவில் இருந்து இரவில் வெளியே வந்து தலேட்டி சாலையில் ராஜா நடை போட்டு சுற்றி திரிந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒருவர் இதனை வீடியோ எடுத்து இணைய தளங்களில் வெளியிட்டார். அங்கு வசிக்கும் அனைவரும் எச்சரிகையுடன் இருக்குமாறு அதை இணையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Lions

இது குறித்து வனத் துறையிடம் விசாரித்த போது, அது மலைப்பகுதி என்பதால் விலங்குகள் பூங்காவில் இருந்து இரவில் வெளியே வந்து மக்கள் வசிக்குமிடத்தில் சுற்றி திருந்து விட்டு மீண்டும் பூங்காவிற்குள் சென்று விடும். இது ஏற்கனவே பல முறை நடந்துள்ளதாகவனத்துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின.