‘இரவில் நித்தியானந்தா அறையில்…ஆபாச வாட்ஸ் ஆப் குரூப்பில் நிர்வாண புகைப்படங்கள்’ ‘ : ஜனார்த்தனா ஷர்மா கொடுக்கும் அடுத்த ஷாக்!

 

‘இரவில் நித்தியானந்தா அறையில்…ஆபாச வாட்ஸ் ஆப் குரூப்பில் நிர்வாண புகைப்படங்கள்’ ‘ : ஜனார்த்தனா ஷர்மா கொடுக்கும் அடுத்த ஷாக்!

தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத்  உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

நித்தியானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு, ஆள்கடத்தல் என பல வழக்குகள் குஜராத், கர்நாடக நீதிமன்றங்களில்  சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே நித்தியானந்தாவின்  தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக இருந்த ஜனார்த்தனா ஷர்மா, நித்தியானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத்  உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ttn

இதனிடையே   குஜராத் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மேற்கு இந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டிலிருந்து  தத்துவப்ரியா, அவரது தங்கை நித்ய நந்திதா இருவரும் கடந்த 27 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். அதில்,  எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பமில்லை. நாங்கள் தற்போது சுதந்திரமாக இருக்கிறோம். எங்கள் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றனர்.ஆனால்  இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் 16 ஆம் தேதிக்குள் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ  அந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். 

ttn

இந்நிலையில்  குஜராத் நீதிமன்றத்தில் நேற்று பிராமண பாத்திரத்தை தாக்கல் செய்த ஜனார்த்தனா ஷர்மா , ‘நித்தியானந்தா ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இருக்கும் ஆபாச வாட்ஸ்ஆப் குரூப்  ஒன்றை வைத்துள்ளார். அந்த குரூப்பில் உள்ளவர்களை  நிர்வாண புகைப்படங்களை அனுப்ப சொல்லி வற்புறுத்துவார்.

ttn

இரவு நேரங்களில் அவருடைய ரூமிற்க்கு ஆன்மீக தீட்சை என்ற பெயரில் சிறுமிகள் சென்று வருவர். அந்த ஆபாச வாட்ஸ்ஆப் குரூப்பில் என் மகள்கள்   தத்துவ பிரியானந்தா மற்றும் நித்ய நந்திதா இருவரும் உள்ளனர்’ என்று கூறி அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.