இரண்டு மாவட்டமாக பிரியும் மதுரை! இது எடப்பாடியின் சாதனை!! அமைச்சர் செல்லூர் ராஜீ

 

இரண்டு மாவட்டமாக பிரியும் மதுரை! இது எடப்பாடியின் சாதனை!! அமைச்சர் செல்லூர் ராஜீ

கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதலமைச்சராக ஆகலாம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இரண்டு மாவட்டமாக பிரியும் மதுரை! இது எடப்பாடியின் சாதனை!! அமைச்சர் செல்லூர் ராஜீ

கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் முதலமைச்சராக ஆகலாம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மதுரை ஹச்.எம்.எஸ் காலணி பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜனநாயகத்தின் காவலர்களாக மக்கள் உள்ளனர். மக்கள் தேவையான திட்டங்களை செய்கின்ற அரசாக அதிமுக அரசு உள்ளது. இன்னும் கமல்ஹாசன் நடிகராக தான் உள்ளார். முழுநேர அரசியல்வாதி எனக்கூறியவர் தற்போது மீண்டும் சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கிறார். அவர் சினிமாவில் வேண்டும் என்றால் முதலமைச்சராக ஆகலாம், நடைபெற்ற தேர்தல்களில் அவருக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை. வரும் தேர்தல்களில் பொருத்திருந்து பார்போம்.

மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன. மதுரையை இரண்டாக பிரிக்கும் அறிவிப்பு முதல்வர் வெளியிடலாம். தமிழகத்தில் புதிதாக 7 மாவட்டங்களை உருவாக்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாதனை படைத்துள்ளார்.  மக்கள் விருப்பப்படி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றன, மதுரை மாவட்டத்தை பிரிப்பது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடலாம்” என்று கூறினார்.