இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை…கலங்க வைக்கும் சம்பவம்!

 

இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை…கலங்க வைக்கும் சம்பவம்!

கௌரி குழந்தைகளுடன் வறுமையில் வாடியதோடு மன உளைச்சலுக்கும்  ஆளாகியுள்ளார்.

கோவையில் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கெளரி. இவருக்கு  திவ்யதர்ஷினி மற்றும் பிரனேஷ் என்ற இரு மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ளனர். கௌரியின் கணவரோ குடும்பத்தைப் பற்றி யோசிக்காமல் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன்  தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கௌரி குழந்தைகளுடன் வறுமையில் வாடியதோடு மன உளைச்சலுக்கும்  ஆளாகியுள்ளார்.

murder

இந்நிலையில் கெளரி தற்கொலை செய்து கொள்ளலாம் வென்று முடிவெடுத்துள்ளார். இருப்பினும் இரண்டு குழ்நதைகளி எப்படி விட்டு செல்வது என்று யோசித்த அவர், தனது இரு குழந்தைகளையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்ததோடு,  தானும் தற்கொலை செய்துகொண்டார்.

suicide

இதுகுறித்து தகவலறிந்து   சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர், கௌரி மற்றும் அவரது இரு குழந்தைகளின் சடலங்களை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ணைப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.