‘இரண்டு குடும்பம் மானமும் கெட்டுப்போய்விடும்’: கவின்-லாஸ்லியாவை கண்டித்த வனிதா 

 

‘இரண்டு குடும்பம் மானமும் கெட்டுப்போய்விடும்’: கவின்-லாஸ்லியாவை கண்டித்த வனிதா 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை:  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 64 நாட்களை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை பாத்திமா பாபு,வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன்,மதுமிதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் இந்த வாரம் டாஸ்க்காக மீண்டும் பிக் பாஸ் வீடு இரு கிராமங்கமங்களாக மாறியுள்ளனர். அதில் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த லாஸ்லியா மற்றும் கவின் காதலில் விழுகின்றனர். அதனால் பல்வேறு பிரச்சனை ஏற்படும் என்பதால் அதை பிரிக்கக் கிராம மக்கள் நினைக்கின்றனர். 

இந்த புரோமோவில்,இருவரும் அமர்ந்துகொண்டு பேசுவதை கண்ட வனிதா, ‘இரண்டு குடும்பம் மனமும் கெட்டுப்போய்விடும். ஊரே பார்த்து சந்திசிரிச்சிடும், உங்க மாப்பிள்ளை கிட்ட சனிக்கிழமை பேசுறோம்’ என்றார். உடனே சேரன், ‘அவருடன் கவினை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவோம்’ என்று சொல்ல உடனே அனைவரும் கலகலவென்று சிரிப்பது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.