இரண்டு இயக்குனர்களுடன் ராஜுமுருகனின் அடுத்த படம்?

 

இரண்டு இயக்குனர்களுடன் ராஜுமுருகனின் அடுத்த படம்?

ராஜுமுருகனின் அடுத்த திரைப்படத்தில் இரண்டு இயக்குனர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சென்னை: ராஜுமுருகனின் அடுத்த திரைப்படத்தில் இரண்டு இயக்குனர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

குக்கூ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜுமுருகன். இவரின் இரண்டாவது படமான ‘ஜோக்கர்’, தேசிய விருது பெற்றது. தற்போது அவர் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியாகவுள்ள ‘ஜிப்ஸி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘very very bad’ எனும் இதன் சிங்கிள் டிராக் கவனம் ஈர்த்தது. இதில் திருமுருகன் காந்தி, தோழர் நல்லகண்ணு, திருநங்கை கிரேஸ் பானு, வளர்மதி, பியூஸ் மனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் ராஜுமுருகனின் அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

sasi

இந்த திரைப்படத்தில் சசிக்குமார் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். சமீபத்தில் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த சமுத்திரகனி, ராஜுமுருகனின் அழைப்புக்காக காத்திருக்கிறோம். அவர் அழைத்ததும் படப்பிடிப்பில் கலந்துகொள்வோம் என தெரிவித்துள்ளார்.