இரண்டாவது திருமணம் செய்து கொண்டது ஏன்? நடிகர் பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!

 

இரண்டாவது திருமணம் செய்து கொண்டது ஏன்? நடிகர் பிரகாஷ் ராஜ் ஓபன் டாக்!

நடிகர் பிரகாஷ் ராஜ் தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். 

பெங்களூர்:  நடிகர் பிரகாஷ் ராஜ் தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். 

prakash raj

நடிகர் பிரகாஷ்ராஜ் மனைவி லலிதா குமாரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை  விவாகரத்து செய்து விட்டு  போனி வர்மா என்ற டான்ஸ் மாஸ்டரை இரண்டாவதாகத்  திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

prakash

இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தனது இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். அதில், எனக்கு நான்கு  குழந்தைகள். அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. அவன் விளையாடும் போது  அடிபட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான்.  யாரையும் யாரும் இப்படி தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. நம்மைப்  பார்த்துத் தான் நம் பிள்ளைகள் வளர்க்கிறார்கள். லலிதாவுக்கும் எனக்கும் பிரச்னை  ஏற்பட்டது. அதனால் போலியாக வாழ கூடாது என்று முடிவெடுத்து இருவரும் வெளிப்படையாகப் பேசி பிரிந்து விட்டோம்’ என்றார்.
 

prakash

தொடர்ந்து பேசிய அவர், ‘ நான் போனி வர்மாவை திருமணம் செய்ய முடிவெடுத்த போது, அவரை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று  அப்பா, தங்கை, மகள் 3 பேரையும் உட்கார வைத்து அவர்களின் சம்மதத்தைக் கேட்டேன். அப்போது என் 14 வயது மகள் என் திருமணத்திற்கு உடனே சம்மதம் தெரிவித்தாள். என் வீட்டில் அதிக பெண்கள் இருப்பதால் அவர்களிடம் சம்மதம் பெறவேண்டிய  பொறுப்பு எனக்கு இருந்தது. ஆனால் என் அம்மாவால் மட்டும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் அழுதுவிட்டார். லலிதாவுக்கு நான் மட்டும் தான் விவாகரத்து அளித்துள்ளேன்.   என் அம்மாவும், குழந்தைகளும் அவருக்கு விவாகரத்து அளிக்கவில்லை. என் முதல் மனைவி லலிதாவும், இரண்டாவது மனைவி போனியும் குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகி விட்டனர்’ என்று கூறியுள்ளார்.