இரண்டாவது கணவர் அடித்து துன்புறுத்துகிறார்: பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்!

 

இரண்டாவது கணவர் அடித்து துன்புறுத்துகிறார்: பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்!

தன்னையும் தன் மகளையும்  தினமும் அடித்துத் துன்புறுத்துவதாகப் பரபரப்பு  புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இரண்டாவது கணவர் அடித்து துன்புறுத்துகிறார்: பிரபல நடிகை போலீசில் பரபரப்பு புகார்!

மும்பை: மதுபோதையில் இரண்டாவது கணவர் அடித்து உதைப்பதாகப் பிரபல நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். 

பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் நாகினி உட்பட பல்வேறு தொடர்களில்  நடித்துள்ளார். இவரும்  சக நடிகரான ராஜா சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற மகள்  உள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களது திருமண வாழ்க்கை சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தில்  முடிந்தது. 

இதையடுத்து கடந்த  2013 ஆம் ஆண்டு ஸ்வேதா, நடிகர் அபினவ் கோலியை காதலித்து மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆண்  குழந்தை ஒன்று இருக்கிறது.

இந்நிலையில் மும்பை காந்திவிலி காவல் நிலையத்தில், மதுபோதையில் தனது இரண்டாவது கணவர் அபினவ், தன்னையும் தன் மகளையும்  தினமும் அடித்துத் துன்புறுத்துவதாகப் பரபரப்பு  புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்குப் பிறகு  நடிகர் அபினவ் கோலியை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.