இயற்கைக்கு மாறான உறவு ! இஸ்ரோ விஞ்ஞானி கொலை !

 

இயற்கைக்கு மாறான உறவு ! இஸ்ரோ விஞ்ஞானி கொலை !

ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி கொலை சம்பவத்தில் அவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்தான் தீர்த்துக் கட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஐதராபாத்தில் இஸ்ரோ விஞ்ஞானி கொலை சம்பவத்தில் அவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்தான் தீர்த்துக் கட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் அமீர்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் மர்ம முறையில் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் சீனிவாஸ் என்பவரை கைது செய்துள்ளனர்.

isro

20 ஆண்டுகளாக தனிமையில் இருந்து வரும் சுரேஷ் வசதியானவர் என்பதால் அவரிடம் இருந்து பணத்தி பறிக்க திட்டமிட்ட சீனிவாஸ் அவருக்கு உதவி செய்வது போல் நெருங்கி பழகிவந்துள்ளார். நாளடைவில் அவருடைய தனிமையை பயன்படுத்திக்கொண்ட சீனிவாஸ் அவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு ஆசையை அதிகரிக்கச் செய்துள்ளார். மேலும் இதற்காக அவ்வப்போது சுரேஷிடம் பணமும் பெற்றுள்ளார் சீனிவாஸ். மேலும் கடந்த 1ம் தேதி வழக்கம்போல் சுரேஷ் வீட்டிற்கு வந்த சீனிவாஸ் அவருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதிக பணம் தருமாறு கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் சுரேஷ் பணம் தரமுடியாது என கூறியதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாஸ், இஸ்ரோ விஞ்ஞானியை நிர்வாண கோலத்திலேயே கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். சம்பவம் நடந்த குடியிருப்பில் சிசிடிவி இல்லாமல் வழக்கில் துப்பு கிடைக்காத நிலையில் அருகில் இருந்த சந்திப்புகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். மேலும் சுரேஷ் வீட்டில் இருந்து திருடப்பட்ட 2 மோதிரங்கள் மற்றும் ரூ .10,000 ஆகியவற்றை போலீசார் மீட்டுள்ளனர். சுரேஷின் மனைவி சென்னையில் வங்கியில் பணிபுரிகிறார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இயற்கைக்கு மாறான உறவுகளில் ஆண்களும்,பெண்களும் ஈடுபடும்போது இதுபோன்ற சம்பவங்கள் சிவப்பு கம்பளம் விரித்து அவர்களை வரவேற்கிறது.