இயக்குனர் பாலாவுக்கு பதிலடி கொடுக்க நினைக்கிறாரா ‘வர்மா’ தயாரிப்பாளர் !?

 

இயக்குனர் பாலாவுக்கு பதிலடி கொடுக்க நினைக்கிறாரா ‘வர்மா’ தயாரிப்பாளர் !?

இயக்குனர் பாலா எடுத்த ‘வர்மா’ படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு மொத்தப் படத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு மறுபடியும் புதிதாக எடுக்க விருக்கிறோம் என்று அறிவித்திருந்தார் அதன் தயாரிப்பாளர்

இயக்குனர் பாலா எடுத்த ‘வர்மா’ படத்தை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு மொத்தப் படத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு மறுபடியும் புதிதாக எடுக்க விருக்கிறோம் என்று அறிவித்திருந்தார் அதன் தயாரிப்பாளர்.

அதனைத் தொடர்ந்து, கவுதம் மேனன் இயக்குவார் என்று தொடங்கி, கோடம்பாக்கத்தில் உள்ள பெரிய இயக்குனர் பெயரெல்லாம் அடிபட்டது! எல்லாம் யூகங்கள் என்று சொல்லிவிட முடியாது.பாலா மாதிரி ஒரு இயக்குனர் இயக்கிய படத்தை நாம் இயக்குவது சரியாகாது என்று பலரும் மறுத்துவிட்டதுதான் உண்மை.

வர்மாவை ஏற்கனவே தெலுங்கில் இயக்கிய இயக்குனரையும் கேட்டுப்பார்த்திருக்கிறார்கள். அவரும் மறுத்துவிட, அவரது உதவியாளர் இயக்கவிருப்பதாக அதிகாரப் பூர்வமற்ற தகவல் வந்தது. இன்று காலையில், எட்டு ஆண்டுகளுக்கு அப்புறம் ரவி.கே.சந்திரன் இந்தப்படத்தில் இணைந்திருக்கிறார் என்று ஒரு ட்வீட்டை தட்டிவிட்டிருந்தார் தயாரிப்பாளர்.

adithya varma

சற்று முன்பு,படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு பரப்பரப்பைப் பற்றவைத்திருக்கிறார். படத்தின் டைட்டிலையும் மாற்றியிருக்கிறார்கள்.’ஆதித்ய வர்மா’.

இயக்குனர் பாலா, தனது அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கிவிட்டார் என்று செய்தி இன்றுதான் வெளியானது. இந்த நிலையில் அவருக்கு பதிலடி கொடுப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டிருக்கிறார் முகேஷ் ஆர்.மேத்தா.