இயக்குநர் மணிரத்னத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு…அப்பல்லோவில் அனுமதி…

 

இயக்குநர் மணிரத்னத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு…அப்பல்லோவில் அனுமதி…

பிரபல முன்னணி இயக்குநர் மணிரத்னம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல முன்னணி இயக்குநர் மணிரத்னம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் திரைமொழியை மாற்றியதில் முக்கிய பங்கு அவருக்கு உண்டு. உலக அரங்கில் அவரின் படங்களுக்கு மிகப்பெரும் மரியாதை உள்ளது. அவர் படங்கள் பாடமாக திரைப்பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. கமல் மற்றும் ரஜினியின் வாழ்வில் மறக்க முடியாத படங்களை தந்தவர். கமலுக்கு நாயகனும் ரஜினிக்கு தளபதியும் என்று அவர் இயக்கத்தில் வந்த இரு படங்களும் தமிழ் சினிமா பொக்கிஷங்கள். 

mani

அவர் கடைசியாக இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக தன் கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க உள்ளது. 

apollo

பொன்னியின் செல்வன் படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த மணிரத்னம் திடீர் நெஞ்சுவலி காரணமாக க்ரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னரே நான்கு முறை ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இது சாதரண நெஞ்சு வலி என தகவல்கள் தெரிவிக்கிறது. 

அவருக்கு நெஞ்சு வலி இல்லை என்று மறுக்கும் மற்றுமொரு தகவலில் வயிற்று உபாதையால்தான் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்றும் இன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.