இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

 

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளதாக எழுந்த புகாரில்  இயக்குநர்  பா. ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளதாக எழுந்த புகாரில்  இயக்குநர்  பா. ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சையாகப் பேசியதாகப் புகார் எழுந்தது.  பா. ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்  காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

chola

இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில், ‘வரலாற்றுத் தகவலின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், தனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது கருத்தை  சமூக வலைதளங்களில் தவறான நோக்கத்தில் பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.   

hc

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி,  சமூகத்தில் பேச பல விஷயங்கள் இருக்கும் போது, மக்கள் கொண்டாடும்  மன்னர் ஒருவரை இவ்வாறு பேசுவது ஏன்? இது போன்ற பேச்சுக்களைத் தவித்திட வேண்டும்’ என்று கூறினார்.

ranjith

இதையடுத்து வாதிட்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா. ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ரஞ்சித் வரும் புதன்கிழமை வரை கைது செய்யப்பட மாட்டார் என்றும் உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி,  இது தொடர்பாகப் பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.