இயக்குநர் குழந்தைகளின் கல்விக்கு உதவிக்கரம் நீட்டிய சூர்யா!
இயக்குநர் ராம்பாலின் குழந்தைகளது கல்விக்காக நடிகர் சூர்யா நிதியுதவி வழங்கியுள்ளார்.
சென்னை: இயக்குநர் ராம்பாலின் குழந்தைகளது கல்விக்காக நடிகர் சூர்யா நிதியுதவி வழங்கியுள்ளார்.
அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி அளித்து வரும் சூர்யா, சமீபத்தில் இயக்குநர் ராம்பால் என்பவரின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் ‘அடங்காதே’ பட இயக்குநர் சண்முகம் முத்துசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், நண்பர் ‘இயக்குநர்’ ராம்பால் அவர்களின் இரு குழந்தைகளின் பள்ளி செலவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு கல்வி கண் திறக்க உதவிய பெரும் மரியாதைக்குரிய நடிகர் சூர்யா அவர்கள் மென்மேலும் நலமுடனும் வளமுடனும் வாழ நம் கடவுள் முருகன் துணையிருப்பான்..நன்றி’ என ட்வீட்டியுள்ளார்.
நண்பர் “இயக்குனர்” ராம்பால் அவர்களின் இரு குழந்தைகளின் பள்ளி செலவை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு கல்வி கண் திறக்க உதவிய பெரும் மரியாதைக்குரிய @Suriya_offl அவர்கள் மென்மேலும் நலமுடனும் வளமுடனும் வாழ நம் கடவுள் முருகன் துணையிருப்பான்….
நன்றி @agaramvision ✊✊✊???— Shanmugam muthusamy (@shan_dir) October 24, 2018
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘சூர்யா 37’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.