இயக்குநர் கார்த்திக் நரேனை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர் 

 

இயக்குநர் கார்த்திக் நரேனை புகழ்ந்து தள்ளிய பிரியா பவானி சங்கர் 

பிரியா பவானி சங்கர் மாஃபியா படம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சென்னை: பிரியா பவானி சங்கர் மாஃபியா படம் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

சின்னதிரை நாயகியாக வலம் வந்து கொண்டு இருந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்தார். மற்ற நடிகைகள் போல் இல்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘துருவங்கள் பதினாறு’ பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா படத்தில் நடிக்கிறார். 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படம் குறித்து பிரியா பவானி சங்கர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மாஃபியா படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மகிழ்ச்சியான, உற்சாகமான, மிக வேகமாக இந்த படப்பிடிப்பு நடந்தது. கார்த்திக் நரேனின் 3 பவுண்ட் எடை கொண்ட விசேஷ மூளையின் திறன் பற்றி நாங்கள் இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

That’s a wrap of ‘Mafia’ for me? It was a fun cheerful and a super fast quick shoot. We are still wondering about the capacity of this 3 pound super special brain of @karthicknaren_m @arunvijayno1 You are a surprise package of kindness dedication perseverance talent positivity and an unexpected friend I made at work? It never felt like we were shooting at a stretch for a month and I’m gonna miss everyone in my routine now. @rtheprotagonist @gokul_benoy @ashokstylist27 Renu and the whole bunch of wonderful asst directors u all made it more special and memorable? Mafia will always remain close to my heart for so many obvious reasons. Love you all ❤️ PS: inspite of all the fun it’s still a serious movie ? #Mafia

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

விடா முயற்சி, திறமை, நேர்மறை எண்ணம் எல்லாம் மொத்தம் கொண்ட ஒரு ஆச்சரியமான நபர் அருண்விஜய். எதிர்பாராமல் எனக்கு கிடைத்த நண்பர். ஒரு மாதம் விடாமல் படப்பிடிப்பு நடைபெற்றது எங்களுக்குத் தெரியவேயில்லை.  குழுவில் இருக்கும் அனைவரும் இந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாததாக மாற்றினார்கள். இப்படிப் பல காரணங்களுக்காக மாஃபியா எப்போதும் என் இதயத்துக்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.