இமாச்சலில் திருமணத்திற்குச் சென்ற பேருந்து கவிழ்ந்து கோர விபத்து !

 

இமாச்சலில் திருமணத்திற்குச் சென்ற பேருந்து கவிழ்ந்து கோர விபத்து !

இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஜங்கா என்னும் பகுதியில் இருந்து இன்று காலை  23 பேரை ஏற்றுக் கொண்டு பேருந்து ஒன்று திருமணத்திற்குச் சென்றுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஜங்கா என்னும் பகுதியில் இருந்து இன்று காலை  23 பேரை ஏற்றுக் கொண்டு பேருந்து ஒன்று திருமணத்திற்குச் சென்றுள்ளது. அந்த பேருந்து திடீரென ராஜ்கர் துணைப்பிரிவு கிரிபுல்லுக்கு அருகிலுள்ள மரியோக் என்னும் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் நிலை தடுமாறிக் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த  4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

bus

தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் பேருந்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்கத் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

bus

இது குறித்துப் பேசிய சிர்மௌர் மாவட்ட காவல்துறை அதிகாரி அஜய் சர்மா, விபத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டு சோலன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.