இப்போது வழக்கிலிருந்து ஓய்வு எடுக்கலாமா? விஜய் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து குஷ்பு கேள்வி
நேற்று கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் நடந்த விசாரணை தொடர்ந்து, இந்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் நடந்த விசாரணை தொடர்ந்து, இந்த விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 வாகனங்களில் வந்த 8-க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் மாலை 5 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நிறைவடைந்ததையடுத்து நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தி உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய வருமானவரித்துறை அதிகாரிகள், 2 படத்தின் வருவாய்க்கும் நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விசாரணை முடிந்தது: நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார். 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். Can we rest the case now?? pic.twitter.com/6SY2hoLOVT
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 13, 2020
இதுதொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “விசாரணை முடிந்தது, நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. பிகில் படத்திற்கு ரூ. 50கோடி மாஸ்டர் படத்திற்கு ரூ. 80 கோடியை விஜய்ச்ம்பளமாக பெற்றுள்ளார். 2 படத்தின் வருவாய்க்கும் நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். இப்போது வழக்கிலிருந்து ஓய்வு எடுக்கலாமா? can we rest the case now? என” பதிவிட்டுள்ளார்.