“இப்பலாம் மாமரத்துல மாங்காயை விட மனுஷன்தான் தொங்கறான்”-தற்கொலை என காமிக்க தொங்கவிடப்பட்ட இளைஞர்…   

 

“இப்பலாம் மாமரத்துல மாங்காயை விட மனுஷன்தான் தொங்கறான்”-தற்கொலை என காமிக்க தொங்கவிடப்பட்ட இளைஞர்…   

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொலை என சந்தேகிக்கப்படும் 25 வயது இளைஞரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது 

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அரவிந்தகுமார் என்ற இளைஞரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அரவிந்த்குமாரின் உடல் செவ்வாய்க்கிழமை மாலை போரகலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிசோலி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இது பற்றி அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது, விசாரணை நடந்து வருவதாக போலீசார் கூறினார்கள். இறந்தவரின் சகோதரர் அளித்த புகாரில், பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டதாகவும் பின்னர் தற்கொலை வழக்கு எனக் காட்ட அவரது உடலை மரத்திலிருந்து தொங்கவிட்டதாகவும் கூறப்படுகிறது.