இன்று முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்!

 

இன்று முதல் தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்!

கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

கடந்த மாதம் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்ற பின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வை மார்ச்8 முதல் ஏப்ரல் 9 வரை நடத்தச் சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் கூட்டம் முடிவு செய்தது. அதன் படி கடந்த 8 ஆம் தேதி கூடிய சட்டப்பேரவையில் திமுக பொதுச் செயலாளர்  க.அன்பழகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பின்னர் கூட்டம் மார்ச் 11(இன்று) ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது. 

ttn

அதன் படி இன்று காலை 10 மணிக்குத் தொடங்க உள்ள சட்டப்பேரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதனையடுத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் மானிய கோரிக்கை தாக்கலும், விவாதத்தின் பின்னர், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.