இன்று முதல் ஜன்தன் கணக்குகளுக்கு  ரூ.500 டெபாசிட்! ஏப்.9 ஆம் தேதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்!!

 

இன்று முதல் ஜன்தன் கணக்குகளுக்கு  ரூ.500 டெபாசிட்! ஏப்.9 ஆம் தேதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்!!

ஊரடங்கின் போது உதவும் வகையில் மத்திய அரசு அறிவித்த பெண்களுக்கான 500 ரூபாய் உதவித்தொகை இன்று முதல் அவர்களின் ஜன் தன் கணக்குகளில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் உதவுவதற்காக பிரதமரின் கரிப் கல்யான் திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களின் ஜன் தன் கணக்குகளில்  500 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, வங்கிகள் இன்று முதல் பெண்களின் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் முதற்கட்டமாக தலா 500 ரூபாய் வீத செலுத்தும் என அறிவித்துள்ளன.

Money

இந்தத் தொகையை அவர்கள் வரும் ஏப்ரல் 9ஆம் தேதிக்குப் பின்னர் வங்கிகளிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிக்க வேண்டிய இந்தத் தருணத்தில் பெண்கள் கூட்டமாக சென்று பணத்தை எடுக்காமல் தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளுமாறு வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.