இன்று முதல் அப்டேட்டான ஸ்டேட் பேங்க் ஏடிஎம்கள்!

 

இன்று முதல் அப்டேட்டான ஸ்டேட் பேங்க் ஏடிஎம்கள்!

இன்று  முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் ஓடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு வந்தது.

இன்று  முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் ஓடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு வந்தது.

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு OTP செயல்முறையை நடைமுறைப்படுத்த ஸ்டேட் வங்கி முடிவெடுத்துள்ளது. அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க வரும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கியில்  பதிவு செய்துவைத்துள்ள மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதை பயன்படுத்திய பின்னரே பணம் எடுக்கமுடியும். வேறு வங்கி ஏடிஎம்களில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வழக்கம்போல OTP இல்லாமல் பணம் எடுக்கலாம்.

SBI

இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க இது கொண்டுவரப்படுவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.