இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

 

இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

பின்னர் துறைவாரியான  விவாதம் நடைபெறும் தேதி குறிப்பிடாமல் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி  2020-21-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்  தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. அதேபோல்  தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடங்கியது. அதில்  2020-21-ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கையை ஓபிஎஸ்  தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு நடைபெற்றது.பின்னர் துறைவாரியான  விவாதம் நடைபெறும் தேதி குறிப்பிடாமல் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 

ttb

இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை விடுமுறைகள் தவிர மொத்தம் 23 நாட்களுக்கு நடத்துவது சபாநாயகர் தனபால் முடிவெடுத்தார். 

ttn

இந்நிலையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காகத்  தமிழக சட்டமன்ற  கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. காலை 10 மணியளவில் தொடங்கும் இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான க.அன்பழகன், எம்எல்ஏ  காத்தவராயன், கே.பி.பி.சாமி, முன்னாள் எம்எல்ஏ  ப.சந்திரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் பேரவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் மீண்டும் 11 ஆம் தேதி முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்துநடைபெறும். இதில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.