இன்று மதுரை வருகிறார் மோடி: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

 

இன்று மதுரை வருகிறார் மோடி: பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

மதுரை: மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதற்காக, பிரதமர் மோடி, காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து  தனி விமானம் மூலம் புறப்படும் 11.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். இதையடுத்து சுற்றுவட்டச்சாலை வழியாக வரும் பிரதமர் மோடி, 11.30 மணிக்கு மண்டோலா நகர் திடலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள், தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஆளுநர் பன்ரிவால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு பாஜக மாநாட்டிலும்  பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதையடுத்து 3மணியளவில் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து கொச்சிக்குப் புறப்படுகிறார். 

முன்னதாக மோடியின் வருகையின் போது அவருக்கு எதிராகக் கருப்பு கொடி காட்டப்படும் என்று வைகோ கூறியது குறிப்பிடத்தக்கது.