இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்…எங்கெங்கு நடைபெறுகிறது என்று தெரியுமா?

 

இன்று  போலியோ சொட்டு மருந்து முகாம்…எங்கெங்கு நடைபெறுகிறது என்று தெரியுமா?

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தவறாமல் அழைத்து வந்து பெற்றோர்  போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து  முகாம் நடைபெறவுள்ளது. 

இளம்பிள்ளைவாத நோயை தடுக்கும் நோக்கில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு  போலியோ சொட்டுமருந்து இன்று  வழங்கப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள இந்த முகாம் மாலை 5 மணி வரை  நடைபெறவுள்ளது.

 

இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம், 5 வயது வரை உள்ள 71 லட்சம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து தர திட்டமிடப்பட்டுள்ளது. இதனால்   5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தவறாமல் அழைத்து வந்து பெற்றோர்  போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

 


 

அதேபோல் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வண்ணம் பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.