இன்று பணிஓய்வு பெறும் ஜாங்கிட் ஐ.பி.எஸ்ஸின் உருக்கமான கடிதம்

 

இன்று பணிஓய்வு பெறும் ஜாங்கிட் ஐ.பி.எஸ்ஸின் உருக்கமான கடிதம்

என்னுடைய 34 ஆண்டு கால சிறப்பான பணிக்கு என்னுடன் இரவு பகலாக ஒத்துழைத்த, நீங்கள் அனைவரும் தான் காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் ஓய்வு பெறுகின்ற இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பணியிலிருந்து ஓய்வுபெறும் டிஜிபி, தனது ஓய்வு குறித்து உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் அப்படியே!

அன்புடையீர்  வணக்கம், இந்திய காவல் பணியில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து இன்று உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். இந்த காலகட்டத்தில் என்னுடன் பணியாற்றிய காவலர்கள், தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் எனது இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ஏற்பட்ட ஜாதி மோதலை கட்டுப்படுத்தியது, பவாரியா கும்பலை கண்டுபிடித்தது மற்றும் வெள்ளை ரவி, பங்க் குமார் போன்ற பிரபல ரவுடிகளின் மீதான நடவடிக்கையின் போதும் மிக முக்கியமான காலகட்டங்களில் கடுமையான சிரமங்களுக்கிடையிலும் என்னுடன் அனைவரும் இணைந்து பணியாற்றியதை நான் என்றும் மறவேன்.

Jangid IPS

என்னுடைய 34 ஆண்டு கால சிறப்பான பணிக்கு என்னுடன் இரவு பகலாக ஒத்துழைத்த, நீங்கள் அனைவரும் தான் காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான் ஓய்வு பெறுகின்ற இந்த நாளில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அன்புள்ள,
எஸ். ஆர். ஜாங்கிட் , ஐபிஎஸ்.