இன்று பஞ்சமி! வாராஹியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

 

இன்று பஞ்சமி! வாராஹியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளை எல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள்.

இன்று பஞ்சமி! வாராஹியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளை எல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.

 
வாராஹி தேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய்  எடுக்காத தயிர்சாதம் நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து மகிழ்ந்து அருள்வாள் அன்னை!

 
மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் சிறப்பு. சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.

 
மிளகும் சீரகமும் கலந்த தோசை, குங்குமப்பூவும் சர்க்கரையும், ஏலக்காயும், லவங்கமும், பச்சைக்கற்பூரமும் கலந்த பால், கறுப்பு எள்ளுருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் நைவேத்தியமாகச் செய்து தேவியை வணங்கலாம்.