இன்று , திருமண தடையை நீக்கும் பூஜை

 

இன்று , திருமண தடையை நீக்கும் பூஜை

வி என்றாலே வெற்றி. விக்னங்களை தீர்ப்பவர். முழு முதற்கடவுள் விநாயகர். நவகிரகங்களில் நாம் எந்த கிரகத்தின் பிடியில் ஆட்பட்டிருந்தாலும், தோஷங்களில் இருந்து விடுபடச் செய்பவர் விநாயகர். எல்லா நாட்களிலும் விநாயகரை வழிபடலாம் என்றாலும் அமாவாசை அடுத்த சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.

வி என்றாலே வெற்றி. விக்னங்களை தீர்ப்பவர். முழு முதற்கடவுள் விநாயகர். நவகிரகங்களில் நாம் எந்த கிரகத்தின் பிடியில் ஆட்பட்டிருந்தாலும், தோஷங்களில் இருந்து விடுபடச் செய்பவர் விநாயகர். எல்லா நாட்களிலும் விநாயகரை வழிபடலாம் என்றாலும் அமாவாசை அடுத்த சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.

vinayagar

சதுர்த்தியன்று அவரவர் வீட்டில், விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி, வழிபாடு செய்து விரதத்தை தொடங்க வேண்டும். 
பால், பழம் மட்டும் சாப்பிட்டு சமைத்த உணவை தவிர்த்து மாலை வரை உபவாசம் இருக்கவேண்டும். இயலாதவர்கள் ஒருவேளை உணவை எடுத்துக் கொள்ளலாம். மாலை கோவில் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அருகம்புல் சார்த்தி  சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

vinayagar

விநாயகரை எட்டு முறை வலம் வருதல் (பிரதட்சிணம்)வேண்டும். பின்பு விளக்கேற்றி  பிரார்த்தனை நிறைவேற வழிபாடு செய்ய வேண்டும். அதன் பின்பே வீட்டிற்கு வந்து உபவாசத்தை நிறைவு செய்ய வேண்டும். ஜாதகத்தில் எந்த வித தோஷங்கள் இருப்பினும் சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு அனைத்து தடைகளையும் அகற்றி நல்ல வரன்  அமைய வழி செய்வார். மூன்று சதுர்த்திகளைத் தொடர்ந்து விரதமிருந்து வழிபட்டு வந்தால், அந்த விரதங்கள் முடிவதற்குள் வரன் அமைந்து விடும்.