இன்று திருப்பரங்குன்றத்தில் வேல் வாங்கிய முருகன்!

 

இன்று திருப்பரங்குன்றத்தில் வேல் வாங்கிய முருகன்!

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மாலை சூரசம்ஹாரம் நடப்பதையொட்டி திருப்பரங்குன்றத்தில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நிகழ்ந்தது. சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மாலை சூரசம்ஹாரம் நடப்பதையொட்டி திருப்பரங்குன்றத்தில் முருகன் வேல் வாங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நிகழ்ந்தது. சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்கள். மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜை முடிந்தது. விழா நம்பியார்

lord muruga

சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு அம்பாள் கரத்திலிருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் வந்து சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை முடிந்து சுவாமி பூ சப்பரத்தில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையொட்டி இன்று திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா நடைபெற இருக்கிறது!