இன்று கிருஷ்ண பட்ச ரமா ஏகாதசி…. என்ன பலன்கள் கிடைக்கும்?

 

இன்று கிருஷ்ண பட்ச ரமா ஏகாதசி…. என்ன பலன்கள் கிடைக்கும்?

மாதந்தோறும் ஏகாதசி வருகிறது. ஆனால் இன்று வரும் கிருஷ்ண பட்ச ஏகாதசியை முன்னிட்டு விரதமிருந்து வழிபட்டால், பெயருக்கு ஏற்றவாறு ஐஸ்வர்யத்தை தரும். நம்மிடம் இருக்கும் செல்வத்தை நிரந்தரமாக்கும். இன்று உபவாசம் இருப்பவர்கள் ஸ்திரமான ராஜ்யத்தை அடைந்து விளங்குவார்கள். சந்திரசேனனின் புதல்வன் சோபனன். அவன் பசி தாங்காதவன்.

மாதந்தோறும் ஏகாதசி வருகிறது. ஆனால் இன்று வரும் கிருஷ்ண பட்ச ஏகாதசியை முன்னிட்டு விரதமிருந்து வழிபட்டால், பெயருக்கு ஏற்றவாறு ஐஸ்வர்யத்தை தரும். நம்மிடம் இருக்கும் செல்வத்தை நிரந்தரமாக்கும். இன்று உபவாசம் இருப்பவர்கள் ஸ்திரமான ராஜ்யத்தை அடைந்து விளங்குவார்கள். சந்திரசேனனின் புதல்வன் சோபனன். அவன் பசி தாங்காதவன். ஒரு வேளை கூட ஆகாரமில்லாமல் அவனால் இருக்க முடியாது. இவனுக்கு முசுகுந்தன் என்ற அரசன் தன் பெண்ணான சந்தரபாகையை மணம் செய்து வைத்தான். இந்த அரசன் ஒவ்வொரு ஏகாதசி நாட்களிலும் உபவாசம் இருப்பவன். ப்ரஜைகளும் இவனது நிர்பந்தத்தால் உபவாசம் இருப்பவர்கள். ஏகாதசி முந்தைய தினம் ஒவ்வொரு வீதியிலும் நாளை ஏகாதசி, ஒவ்வொருவரும் உபவாசம் இருக்க வேண்டும், விஷ்ணு பூஜை செய்ய வேண்டும் என்று தமுக்கு அடிக்கச் செய்து வந்தான் அரசன்.
 

krishna

உபவாசமில்லாதவனை தூக்கில் போட்டு விடுமாறும் கட்டளையிட்டிருந்தான். இது அவனது ராஜ்ய தர்மம். ஒரு சமயம் சோபனன் மாமனாரின் வீட்டிற்கு வந்தான். அன்று ஏகாதசி. வழக்கம் போல ஏகாதசி விரதத்தை நினைவூட்ட அறிவிப்பு செய்தார்கள். சோபனன் கவலைப்பட்டான். உணவு உண்டால் தலை போய் விடும் என்றும் மனைவி கூறினாள். இவன் பயந்து உபவாசம் இருக்க அது தாங்க முடியாமல் மறுநாள் காலை இறந்து விட்டான்.  சில நாட்கள் கழிந்தன. இவன் மனைவி துன்ப சாகரத்தில் மூழ்கியிருக்க ஸோமசர்மா என்ற பெரியவர் தனது தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு அந்த ஊருக்கு வந்தார். கவலையுடன் உள்ள இப்பெண்ணைக் கண்டார். 
பெண்ணே நீ ஏன் அழுகிறாய். உன் கணவன் மந்தரமலையின் அருகில் ஒரு திவ்ய நகரத்தை ஆண்டு வருகிறானே. உன் கணவன் உயிருடன் இருக்கும் போது உனக்கு ஏன் இத்தனை சோகம் என்றார். இதைக் கேட்ட இவன் மனைவி தன் தந்தையுடன் அங்கு சென்று தன் கணவனைப் பார்த்து மகிழ்ந்தாள். அவனும் இங்கு வாமதேவ முனிவரின் அருளால் எனக்கு உயிர் வந்தது. ராஜ்யமும் கிட்டியது. நான் நிர்பந்தத்தின் பேரில் ஏகாதசியை உன் ஊரில் கடைப்பிடித்தேன். அதன் பலன் இது என்றான். இது அழியாமல் இருக்க என்ன செய்வது என்றும் கேட்டான். அப்பொழுது முனிவர் வந்து உன் மனைவி செய்த ஏகாதசியின் மகிமையால் இது அழியாது என்று வரம் கொடுத்தார். இருவரும் சுகமாக இராஜ்யத்தில் வாழ்ந்து ஏகாதசி விரதத்தை நடத்தி வந்தனர்.
ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டிப்பவர்கள் சந்தேகமின்றி ஒரு அந்தணரைக் கொல்லும் பாவத்திலிருந்து விடுபடுவார்கள்.  கருப்பு நிற பசுக்களும் வெண்ணிற பசுக்களும் வெண்ணிற பாலையே கொடுப்பது போல் தேய்பிறை மற்றும் வளர்பிறையில் தோன்றும் இரு ஏகாதசிகளும் அதை அனுஷ்டிப்பவர்களுக்கு முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமத்தில் ஆனந்தமாக வாழ்வார்.